ஓர் ஆயிரம் பார்வையிலே - Or Aayiram Parvaiyile
பாட்டை கேட்க இதனை அழுத்தவும்
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனை பிரிந்து
வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு
நாளும் மறைவதில்லை
ஓர் ஆயிரம்
பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூடவரும்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம்
பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில்
ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற
பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம்
பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இனிமையான குரலில் அருமையான பாடல்
ReplyDelete