நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - (Nenjam undu nermai undu)


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

ஏய்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா...!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா...!
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு..?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு..?
அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னட மீசை முறுக்கு, ஓய்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அன்னாந்து பார்க்கின்ற மாளிகைக்கட்டி
அதன் அருகில் ஓலை குடுசைக்கட்டி
அன்னாந்து பார்க்கின்ற மாளிகைக்கட்டி
அதன் அருகில் ஓலை குடுசைக்கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும், ஓய்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

உண்டு உண்டு என்று நம்பி காலையெடு 
இங்கு உன்னைவிட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலையெடு 
இங்கு உன்னைவிட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்ப்பதற்கு  தோளை நிமிர்த்து
ரெண்டில் ஒன்றை பார்ப்பதற்கு  தோளை  நிமிர்த்து, ஓய்
அதில் நீதி உன்னை தேடிவரும் மாலைத் தொடுத்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா, ஓய்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)