ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal
பாட்டை கேட்க இதனை அழுத்தவும்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் சேர பிறந்தவளே பாடி வா
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் சேர பிறந்தவளே பாடி வா
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
இடை என்னும் கொடியாட நடமாடிவா
குழல் இசைக்கொஞ்சி விளையாட நீ ஆடி வா
இடை என்னும் கொடியாட நடமாடிவா
குழல் இசைக்கொஞ்சி விளையாட நீ ஆடி வா
தடை மீறி போராட சதிராடிவா
தடை மீறி போராட சதிராடிவா
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் தேட பிறந்தவளே பாடி வா
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயர்க்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
முயர்க்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ, ஓ
ஓ ஓ ஓ
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
உயிருக்கு நிகர் இந்த
நாடு அல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ
உயிருக்கு நிகர் இந்த நாடு அல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரைபோடவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரைபோடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ ஓ ஓ ஓ ஓ
ஆடி வா, ஆடி வா, ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் சேர பிறந்தவளே பாடி வா
ஆடி வா , ஆடி வா, ஆடி வா
அருமை!!! பாடலாசிரியர் ந.முத்துக்கூத்தன் அவர்கள் வாழ்க!!!
ReplyDelete