ஆறு மனமே ஆறு(Aaru Maname-Aandavan Kattalai)


பாட்டை கேட்க இதனை அழுத்தவும்

ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு,
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நீதி
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நீதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும் 
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டாள்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டாள்
உயிர்கள் உன்னை வணங்கும
உண்மையென்பது அன்பாகும்
பெரும் பணிவுயென்பது பண்பாகும்
உண்மையென்பது அன்பாகும்
பெரும் பணிவுயென்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை,கோபம், களவு கொள்பவன்
பேச தெரிஞ்ச மிருகம்
அன்பு, நன்றி, கருணைக் கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம்  
உயர் தெய்வம்யென்பது பிள்ளைமனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனதில்
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

Comments

Popular posts from this blog

ஒத்தயடி பாதையில ஊரு சனம் (Othayadi Pathayela Oorusam Thungayela)

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)